May 6, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலா? விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலா? விசாரணை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

மலாக்காவில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து புலன் விசாரணை செய்யப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.16 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

அந்த வழக்கறிஞர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டலுக்கான ஓர் உள்ளடக்கத்தை சமூக ஊடகத்தில் அனுப்பியுள்ளதாக தமது புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி ஷாம்சுடின் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்