Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலா? விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலா? விசாரணை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

மலாக்காவில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து புலன் விசாரணை செய்யப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.16 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

அந்த வழக்கறிஞர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டலுக்கான ஓர் உள்ளடக்கத்தை சமூக ஊடகத்தில் அனுப்பியுள்ளதாக தமது புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி ஷாம்சுடின் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு