Mar 18, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ஒருவர் மரணம், இருவர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒருவர் மரணம், இருவர் படுங்காயம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

பாண்டார் துன் ஹுசேன் ஓன் னில் நிகழ்ந்த கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 5:15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஸ்.யு.வி ரக வாகனத்தில் பயணித்த அக்கார் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் உதவி இயக்குநர் அகமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில் அக்காரில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகமாட் முக்லிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் சவப் பரிசோதனைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமாட் முக்லிஸ் மேலும் தகவல் தெரிவித்தார்.

Related News