Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தூண்டிவிடும் போக்கை நிறுத்திக்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் போக்கை நிறுத்திக்கொள்வீர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 27-

அல்லாஹ் என்று சொல் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனை தொடர்பில் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி, பிரச்னையை பூதகரமாக்குவதை அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புக்கிட் அமான் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்குவதை விடுத்து, அமைதி நிலைக்கு அனைத்து தரப்பினரும் திரும்ப வேண்டும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கய்ரி ஜமாலுட்டின் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு தாம் உடன்படுவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி மோஹட் ஜெயின் தெரிவித்துள்ளார்.

3R விவகாரம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இனம் சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது ஆளும் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் மற்ற தரப்பினராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இவ்விவகாரத்தை தொடர்வதை அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மோஹட் ஷுஹைலி எச்சரித்துள்ளார்.

Related News

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு