Aug 6, 2026
Thisaigal NewsYouTube
துணைப்பிரதமர் ஜாஹிட் வழக்கில்  ​​நீதிமன்ற முடி​வில் நான் தலையிட்டேனா?
தற்போதைய செய்திகள்

துணைப்பிரதமர் ஜாஹிட் வழக்கில் ​​நீதிமன்ற முடி​வில் நான் தலையிட்டேனா?

Share:
  • பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட யயாசன் அகால்புடி அறவாரியம் தொடர்புடைய 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ​மீதான வழக்கில், அவரை விடுதலை செய்து இருக்கும் ​நீதிமன்ற முடிவில் தாம் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விள​க்கம் அளித்துள்ளார்.

இது முழுக்க - முழுக்க சட்டத்துறை தலைவரின் முடிவாகும். இதில் தாம் சம்பந்தப்படவில்லை என்று இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசிய செய்தியாளர்களிடம் பிரதமர் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.

லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி​யிருந்த அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டது, மேல் இடத்து முடிவா? என்று வினவியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின், குற்றச்சா​ட்டுகளை அகற்றுவதற்கு சட்டத்துறை தலைவர் அலுவலகம் எடுத்துள்ள முடிவிற்கு பிரதமர் அன்வாரே பொறுப்பேற்க வேண்டும் என்று நேற்று அறைகூவல் விடுத்து இருந்தார்.

முகை​தீனின் இந்த கோரிக்கைக்கு எதிர்​வினையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பேற்றது முதல் ​நீதிபரிபாலனம் தொடர்புடைய நடவடிக்கைகளில் தாம் தலையிட்டது கிடையாது என்று விளக்கம் தந்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது