Mar 10, 2026
Thisaigal NewsYouTube
துணைப்பிரதமர் ஜாஹிட் வழக்கில்  ​​நீதிமன்ற முடி​வில் நான் தலையிட்டேனா?
தற்போதைய செய்திகள்

துணைப்பிரதமர் ஜாஹிட் வழக்கில் ​​நீதிமன்ற முடி​வில் நான் தலையிட்டேனா?

Share:
  • பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட யயாசன் அகால்புடி அறவாரியம் தொடர்புடைய 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ​மீதான வழக்கில், அவரை விடுதலை செய்து இருக்கும் ​நீதிமன்ற முடிவில் தாம் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விள​க்கம் அளித்துள்ளார்.

இது முழுக்க - முழுக்க சட்டத்துறை தலைவரின் முடிவாகும். இதில் தாம் சம்பந்தப்படவில்லை என்று இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசிய செய்தியாளர்களிடம் பிரதமர் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.

லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி​யிருந்த அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டது, மேல் இடத்து முடிவா? என்று வினவியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின், குற்றச்சா​ட்டுகளை அகற்றுவதற்கு சட்டத்துறை தலைவர் அலுவலகம் எடுத்துள்ள முடிவிற்கு பிரதமர் அன்வாரே பொறுப்பேற்க வேண்டும் என்று நேற்று அறைகூவல் விடுத்து இருந்தார்.

முகை​தீனின் இந்த கோரிக்கைக்கு எதிர்​வினையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பேற்றது முதல் ​நீதிபரிபாலனம் தொடர்புடைய நடவடிக்கைகளில் தாம் தலையிட்டது கிடையாது என்று விளக்கம் தந்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு