சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் பென்ஜானா கெர்ஜாயா நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக நிறுவனங்களை சேர்ந்த 47 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறி, அவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொக்சோவிடம் பணம் கோரியுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது. நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 33 ஆண்களும், 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


