Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர், நெகிரி செம்பிலானிலுள்ள 3 நிவாரண மையங்களில் 400-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானிலுள்ள 3 நிவாரண மையங்களில் 400-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

நேற்று பெய்த கனமழையால் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் சுங்கை பூலோவிலும் சுபாங்கிலும் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று இரு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில், 88 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

மேலும், நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று அதிகாலை மணி 4.08 அளவில், ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ள வேளையில், இரு குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அதில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, மாநில இயற்கை பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவும் பொது தற்காப்பு படையும் அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

இன்று காலை மணி 7 அளவில், லிங்கி மற்றும் திரியாங் ஆறுகளில், நீர்மட்டம் அபாய அளவில் பதிவாகியுள்ளதாகவும் அவை கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்