Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கன்றுக்குட்டியை விழுங்க மலைப்பாம்பு முயற்சி
தற்போதைய செய்திகள்

கன்றுக்குட்டியை விழுங்க மலைப்பாம்பு முயற்சி

Share:

கெடா, பாலிங், கம்போங் குவார் செம்பெடாக்கில் கன்றுக்குட்டியை விழுங்க முயற்சி செய்த ராட்ஷச மலைப்பாம்பு ஒன்றை பொது தற்காப்பு படையினர் மிக லாவகமாக பிடித்தனர்.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் நிகழ்ந்தது. மூன்று மீட்டர் நீளமுள்ள 40 கிலோ எடை கொண்ட அந்த மலைப்பாம்பு, தனக்கென உரித்தான பாணியில் சத்தமே இல்லாமல் அந்த கன்றுக்குட்டியின் காலை கவ்விய நிலையில், அதன் உடலையும் சுற்றிக்கொண்டது.

மலைப்பாம்பின் கோரப்பிடியில் சிக்கிய கன்றுக்குட்டி, திமிற முடியாமல், உடல் சிறுத்து மெலிதானது. அப்போது அதனை விழுங்க மலைப்பாம்பு தொடங்கியது. அதனைப் பார்த்து விட்ட குடியிருப்புவாசிகள் பொது தற்காப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புப் படையினர் அந்த மலைப்பாம்பை பிடிக்க முயற்சித்த போது அந்த ராட்ஷச ஊர்வனம், தான் விழுங்கிய கன்றுக்குட்டியை வெளியே கக்கியதில் அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி