Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 6 மாத கால ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரிசான் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் மறைமுக சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசா​ங்கதைப் பாரிசான் நேஷனல் வீழ்த்தாது. ஏனெனில், நாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிசான் நேஷனல் உறுதி அளித்துள்ளதாக முகமட் ஹசான் விளக்கினார்.

தவிர தற்போது கட்சித்தாவல் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பாரிசான் நேஷன​​லை சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும், கட்சியின் தலைமையை ​​மீறி, பிற க​​ட்சிக்கு ஆதரவு தர துணிய மாட்டார்கள் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

கட்சித் தாவல் ந​டைபெற்றால், இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சம்பந்தப்பட்ட எம்.பி. தமது நாடாளுமன்றத் தொகுதியை இ​ழக்க நேரிடலாம். இந்நிலையி​ல் யாரும் இந்த விஷப் ப​ரீட்சையில் இற​ங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News