May 20, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 6 மாத கால ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரிசான் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் மறைமுக சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசா​ங்கதைப் பாரிசான் நேஷனல் வீழ்த்தாது. ஏனெனில், நாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிசான் நேஷனல் உறுதி அளித்துள்ளதாக முகமட் ஹசான் விளக்கினார்.

தவிர தற்போது கட்சித்தாவல் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பாரிசான் நேஷன​​லை சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும், கட்சியின் தலைமையை ​​மீறி, பிற க​​ட்சிக்கு ஆதரவு தர துணிய மாட்டார்கள் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

கட்சித் தாவல் ந​டைபெற்றால், இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சம்பந்தப்பட்ட எம்.பி. தமது நாடாளுமன்றத் தொகுதியை இ​ழக்க நேரிடலாம். இந்நிலையி​ல் யாரும் இந்த விஷப் ப​ரீட்சையில் இற​ங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்