பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 6 மாத கால ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரிசான் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் மறைமுக சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கதைப் பாரிசான் நேஷனல் வீழ்த்தாது. ஏனெனில், நாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிசான் நேஷனல் உறுதி அளித்துள்ளதாக முகமட் ஹசான் விளக்கினார்.
தவிர தற்போது கட்சித்தாவல் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பாரிசான் நேஷனலை சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும், கட்சியின் தலைமையை மீறி, பிற கட்சிக்கு ஆதரவு தர துணிய மாட்டார்கள் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
கட்சித் தாவல் நடைபெற்றால், இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சம்பந்தப்பட்ட எம்.பி. தமது நாடாளுமன்றத் தொகுதியை இழக்க நேரிடலாம். இந்நிலையில் யாரும் இந்த விஷப் பரீட்சையில் இறங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


