தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது
தஞ்சோங் பியாய் அருகே மலேசிய கடல்சார் அமலாக்கத்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, படகு ஒன்றில், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக அதன் இடைக்கால இயக்குநர் கேப்டன் காமா அஸ்ரி கமில் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சோங் பியாய்யின் தென்மேற்கே சுமார் 1.7 கடல் மைல் தொலைவில் ரோந்துப் படகில் சென்ற அமலாக்க அதிகாரிகள், அவர்கள் சென்ற கள்ளப் படகை சுற்றி வளைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யபப்ட்டுள்ள 6 பேரும் 22 முதல் 55 வயதிற்குட்பட்ட இந்தோனேசியர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.








