Jan 24, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Share:

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்ததுடன், 16 வயதுடைய மேலும் ஒரு இளைஞர் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், ஜாலான் ஞாலாஸ் - புக்கிட் செங்கே சாலையில் நிகழ்ந்தது. இடைநிலைப்பள்ளி மாணவனான 15 வயது எஸ். சர்வின் என்பவர் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த யமஹா லகென்டா 110 ரக மோட்டார் சைக்கிளும், 16 வயது இளைஞர் பயணித்த மோடடார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்துள்ளார்.

ஷர்வினை மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படும் 16 வயது இளைஞர் கடும் காயங்களுடன் ஜாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புக்கிட் செங்கே வை நோக்கி ஷர்வின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, தாமான் செரி ஞலாஸ் சாலை வளைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இது குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அகமட் ஜாமில் குறிப்பிட்டார்.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு