Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Share:

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்ததுடன், 16 வயதுடைய மேலும் ஒரு இளைஞர் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், ஜாலான் ஞாலாஸ் - புக்கிட் செங்கே சாலையில் நிகழ்ந்தது. இடைநிலைப்பள்ளி மாணவனான 15 வயது எஸ். சர்வின் என்பவர் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த யமஹா லகென்டா 110 ரக மோட்டார் சைக்கிளும், 16 வயது இளைஞர் பயணித்த மோடடார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்துள்ளார்.

ஷர்வினை மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படும் 16 வயது இளைஞர் கடும் காயங்களுடன் ஜாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புக்கிட் செங்கே வை நோக்கி ஷர்வின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, தாமான் செரி ஞலாஸ் சாலை வளைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இது குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அகமட் ஜாமில் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது