Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை

Share:

நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக என்யுதிபி எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடி ​தீர்வு காணப்படவில்லை என்றால் நாட்டின் கல்வித் தரம் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அது கோடி காட்டியுள்ளது.

பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படாமல் இருப்பதே ஆசிரியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் குறைந்த பட்சம் ஓர் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை ஒவ்வொரு பள்ளியும் எதிர்நோக்கி வருவது தற்போது புதிய போக்காக மாறியுள்ளது.

காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்படாததால், ஆசிரியர்களின் பணிச்சுமை இரட்டிப்பாக உய​ர்ந்து இருப்பதாகவும் அமினுடின் அவாங் விளக்கினார். 

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு