Mar 21, 2026
Thisaigal NewsYouTube
SPRM தொடங்கிய மாபெரும் OPS SAMBA 2.0 கைது வேட்டை
தற்போதைய செய்திகள்

SPRM தொடங்கிய மாபெரும் OPS SAMBA 2.0 கைது வேட்டை

Share:

கோலாலம்பூர், மே 23-

அரச மலேசிய சுங்கத்துறையில் 200 கோடி வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கு வரிப்பணத்தை கசியவிட்ட அதன் அதிகாரிகள் உட்பட 23 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, வளைத்துப் பிடித்துள்ளது.

அரசாங்கத்தற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் அளவிற்கு மிக தந்திரமாக செயல்பட்டதாக நம்பப்படும் 23 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள், SPRM தொடங்கிய OPS SAMBA 2.0 எனும் மாபெரும் கைது நடவடிக்கையின் மூலம் பிடிபட்டுள்ளனர்.

இந்த 23 பேரும், 2009 ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட மேலும் பலவேறு சட்ட சட்டங்களின் வாயிலாக இப்போது தொடங்கி, வரும் ஜுன் மாதம் 6 ஆம் தேதி வரையில் நாடு தழுவிய நிலையில் 6 வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று SPRM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சரக்கு வரி ஏமாற்றப்பட்டது தொடர்பில் சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ முனையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை அதிகாரிகளை இலக்காக கொண்டு கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை SPRM விசாரணை மேற்கொண்டதன் விளைப்பயனாக OPS SAMBA 2.0 மூலமாக மொத்தம் 34 சுங்கத்துறை அதிகாரிகளும், 27 தனிநபகர்களும் கைது செய்யப்பட்டனர் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகள், மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்காமல் கடத்தல் கும்பல்களுடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் வரியை கசியவிட்டு, மோசடி செய்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட இந்த கும்பல் வளைத்துப்பிடிக்கப்பட்டது மூலம் அவர்களின் எட்டு ஆடம்பர கார்கள், கைப்பேசிகள் மற்றும் இதர உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 231 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து