நாடு செழிப்புறுவதற்கு சமூகத்தில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். வேறுபாடுகள் களையப்பட்டு, ஒற்றுமை உணர்வு மேலோங்கினால் மட்டுமே ஒரு செழுமைமிகுந்த நாடாக மலேசியா உருவாக முடியும் என்று பிரமர் குறிப்பட்டார்.
அதேவேளையில் நாட்டு மக்களை பிளவுப்படுத்தக்கூடிய, அவர்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இனவெறி, மதவெறி தொடர்பான விவகாரங்களை ஒரு போதும் முன்னிலைப்படுத்தக்கூடாது. அவற்றை கையாண்ட நாடுகளின் தலைவிதி என்னவானது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டின் 66 ஆவது தேசியத் தினத்தையொட்டி ஆற்றிய பிரதம உரையில் பிரதமர் மேற்கண்ட அறிவுறுத்தலை மலேசியர்களுக்கு வழங்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


