நாடு செழிப்புறுவதற்கு சமூகத்தில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். வேறுபாடுகள் களையப்பட்டு, ஒற்றுமை உணர்வு மேலோங்கினால் மட்டுமே ஒரு செழுமைமிகுந்த நாடாக மலேசியா உருவாக முடியும் என்று பிரமர் குறிப்பட்டார்.
அதேவேளையில் நாட்டு மக்களை பிளவுப்படுத்தக்கூடிய, அவர்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இனவெறி, மதவெறி தொடர்பான விவகாரங்களை ஒரு போதும் முன்னிலைப்படுத்தக்கூடாது. அவற்றை கையாண்ட நாடுகளின் தலைவிதி என்னவானது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டின் 66 ஆவது தேசியத் தினத்தையொட்டி ஆற்றிய பிரதம உரையில் பிரதமர் மேற்கண்ட அறிவுறுத்தலை மலேசியர்களுக்கு வழங்கினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


