நாடு செழிப்புறுவதற்கு சமூகத்தில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். வேறுபாடுகள் களையப்பட்டு, ஒற்றுமை உணர்வு மேலோங்கினால் மட்டுமே ஒரு செழுமைமிகுந்த நாடாக மலேசியா உருவாக முடியும் என்று பிரமர் குறிப்பட்டார்.
அதேவேளையில் நாட்டு மக்களை பிளவுப்படுத்தக்கூடிய, அவர்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இனவெறி, மதவெறி தொடர்பான விவகாரங்களை ஒரு போதும் முன்னிலைப்படுத்தக்கூடாது. அவற்றை கையாண்ட நாடுகளின் தலைவிதி என்னவானது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டின் 66 ஆவது தேசியத் தினத்தையொட்டி ஆற்றிய பிரதம உரையில் பிரதமர் மேற்கண்ட அறிவுறுத்தலை மலேசியர்களுக்கு வழங்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


