பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நூருல் இஸ்ஸா அன்வாரின் கோரிக்கையை அக்கட்சியின் மத்திய தலைமை மன்றம் நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, முனைவர் பட்டப்படிப்பில் அவர் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நூருல் இஸ்ஸா தொடர்ந்து கட்சி உறுப்பினராக செயல்படுவார் என்றும், இடைக்காலத்தில் அவரது பொறுப்புகளை கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் கவனிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக்குப் பின்னர் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக விடுப்பு எடுக்கவுள்ளதாக நூருல் இஸ்ஸா கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
இதனிடையே, அவரது முடிவு அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதையோ அல்லது கட்சிக்குள் நிலையற்ற தன்மையையோ காட்டுவதாக வெளியாகும் தகவல்களை ஃபஹ்மி மறுத்துள்ளார்.
நூருல் இஸ்ஸா தொடர்ந்து கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








