Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நீர் பயன்பாட்டை 10 விழுக்காடு குறைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நீர் பயன்பாட்டை 10 விழுக்காடு குறைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை

Share:

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 06-

பினாங்கு மாநில மக்கள் இம்மாதம் தொடங்கி வரும் ஜுன் மாதம் வரையில் அன்றாடம் பயன்படுத்தும் நீரின் அளவில் 10 விழுக்காட்டை குறைத்துக்கொள்ளும்படி பினாங்கு மாநில நீர் விநியோகிப்பு கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாண்டு முழுவதும் பினாங்கு மாநில மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் சராசரி பத்து விழுக்காடு நீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே. பத்மநாபன் கேட்டுக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் பினாங்கில் நாள் ஒன்றுக்கு சராசரி 927 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுதத்தப்பட்டுள்ளது. ஆனால், இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 877 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு இருப்பதை பத்மநாபன் சுட்டிக்காட்டினார்.

பினாங்கு மாநிலத்தின் பிரதான நீர் அணைக்கட்டுகளான அயேர் ஹித்தாம் மற்றும் தெலுக் பாஹாங் ஆகியவற்றில் நீரின் கொள்ளளவு குறைந்து வரும் பட்சத்தில் மழை வந்தால் மட்டுமே அந்த நீர் பிடிப்பு மையங்களில் நீரின் மட்டம் உயரும் என்ற நிலை உள்ளதாக அவர் விளக்கினார்.

எனவே பினாங்கு மக்கள், அன்றாட நீர் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பத்மநாபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்