கோத்தா கினபாலு, மார்ச்.25-
மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக காஜாங் சிறையில், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் சபா மாநில உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ பீட்டர் ஆண்டனி இரண்டு வாரங்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவராத நிலையில், முன்னாள் KDM கட்சித் தலைவருமான பீட்டர் ஆண்டனியின் நெருங்கிய வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த வாரம் சபாவிற்கு திரும்பியுள்ள அவர், பரோல் நிபந்தனைகளின் கீழ் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது KDM கட்சியின் இடைக்காலத் தலைவரும், ஆண்டனியின் மகளுமான Prescilla மற்றும் கட்சியின் துணைத் தலைவர் Datuk Wetrom Bahanda ஆகியோர் இது குறித்து எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








