Jul 9, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்கள் மூலம் நி தி பெற முயற்சி: நிறுவனத்தின் 34 லட்சம் ரிங்கிட்டை முடக்கியது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் நி தி பெற முயற்சி: நிறுவனத்தின் 34 லட்சம் ரிங்கிட்டை முடக்கியது எஸ்பிஆர்எம்

Share:

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2 கோடி ரிங்கிட் வணிக மூலதன நிதியுதவி பெற முயன்றது தொடர்பான 'ஒப் செகாம்' விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்த சுமார் 34 லட்சம் ரிங்கிட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.

நெல் மற்றும் அரிசி கொள்முதல் செய்வதற்காக நிதி நிறுவனம் ஒன்றில் இந்த போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நெல் மற்றும் அரிசி கொள்முதல் வணிகங்கள் எதுவும் உண்மையில் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, எஸ்பிஆர்எம் சட்டம் 2009 மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடர்கிறது. மேலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் நெல் மற்றும் அரிசி உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 வயது மதிக்கத்தக்க செயல்பாட்டு மேலாளர் ஒருவர் விசாரணைக்கு உதவுவதற்காக ஜூலை 11, 2026 வரை ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்

1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 'லிண்டுங் 24 ஜாம்' திட்டம் கட்டாயம்: உள்ளூர் தொழிலாளர்களுக்கு விருப்பத்தின் பேரில் பங்களிக்கும் வகையில் மாற்றம் - டத்தோஶ்ரீ ரமணன்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 'லிண்டுங் 24 ஜாம்' திட்டம் கட்டாயம்: உள்ளூர் தொழிலாளர்களுக்கு விருப்பத்தின் பேரில் பங்களிக்கும் வகையில் மாற்றம் - டத்தோஶ்ரீ ரமணன்

சிரம்பானில் முன்னேற்பாட்டுப் பயிற்சி: 2 நாட்களுக்குச் சாலைகள் மூடல்

சிரம்பானில் முன்னேற்பாட்டுப் பயிற்சி: 2 நாட்களுக்குச் சாலைகள் மூடல்

போலி ஹலால் முத்திரையுடன் சலவை சோப்பு தயாரித்த தொழிற்சாலை முற்றுகை

போலி ஹலால் முத்திரையுடன் சலவை சோப்பு தயாரித்த தொழிற்சாலை முற்றுகை

கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

சீனப் பிரதிநிதிகளுடன் மலேசியா வந்தாரா ஜோ லோ? / நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் விளக்கம்

சீனப் பிரதிநிதிகளுடன் மலேசியா வந்தாரா ஜோ லோ? / நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் விளக்கம்