May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆள்கடத்தலுக்கு ஆளான நான்கு பிலிப்பைன்ஸ் பெண்கள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஆள்கடத்தலுக்கு ஆளான நான்கு பிலிப்பைன்ஸ் பெண்கள் மீட்கப்பட்டனர்

Share:

லாபுவான், ஏப்ரல் 30-

மனித கடத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் நான்கு பிலிப்பைன்ஸ் பெண்களை இரண்டு வெவ்வேறு சோதனையில் போலீசார் மீட்டுள்ளனர்.

Labuan- னில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளை, பெனாம்ப்பாங்கில் மற்றொரு பெண் கண்டறியப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி லாபுவான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக லாபுவான் போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது ஹமிசி ஹலீம் தெரிவித்தார்.

31 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அப்பெண்கள் மனித கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதுடன் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் கட்டாய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டதாக முகமது ஹமிசி கூறினார்.

Related News