கடந்த வாரம் மளிகைக்கடை ஒன்றில் அதன் பெண் உரிமையாளரை மடக்கி தங்கக் காப்பைக் கொள்ளையிட்டதாக அரச மலேசிய போலீஸ்ப்படையின் கலகத்தடுப்பு போலீஸ்காரர் ஒருவர் கோலத்திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தின் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது குசாரி ஷாரி என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் உலு திரங்கானு அருகில் உள்ள கம்போக் தோக் பிந்தாங், கோல பெராங்கில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் 392 ஆவது பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


