கடந்த வாரம் மளிகைக்கடை ஒன்றில் அதன் பெண் உரிமையாளரை மடக்கி தங்கக் காப்பைக் கொள்ளையிட்டதாக அரச மலேசிய போலீஸ்ப்படையின் கலகத்தடுப்பு போலீஸ்காரர் ஒருவர் கோலத்திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தின் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது குசாரி ஷாரி என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் உலு திரங்கானு அருகில் உள்ள கம்போக் தோக் பிந்தாங், கோல பெராங்கில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் 392 ஆவது பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


