கோலாலம்பூரில் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்த இரண்டு போலீசாரை ஆபாசமாக திட்டி, அச்சுறுத்திய 25 வயது ஆடவர் ஒருவரை போலீஸ் துறை கைது செய்துள்ளது.
புரோட்டான் பிரேவே காரை ஓட்டி வந்த அந்த நபர், அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து போலீசாரை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை 2.36 மணியளவில் செந்தூல், ஜாலான் டத்தோ செனு பகுதியில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு, 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொது ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரீ சாகோனி தெரிவித்தார்.








