பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முதல் ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ பயணத்தின் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு அடுத்த கட்டத்திற்கு நகரவுள்ளது. இப்பயணத்தின் போது நான்கு முக்கிய வியூக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அன்வார், பிராந்திய பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மாற்றம் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் இந்த ஒப்பந்தங்களை அறிவிக்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு இருநாடுகளின் 70-ஆவது தூதரக ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இப்பயணம் அமைகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 142.96 பில்லியன் ரிங்கிட்டாக்கப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








