டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்டின் புதிய தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு இதுவரையில் மூவரின் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸ்மான் இஸ்மாயில்,மஇகா உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி , மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் முன்னாள் தலைவர் அல் - இஷால் தி கெச்சிக் ஆகியோர் இப்பதவிக்கான போட்டியில் இருப்பதாக தீ எட்ஜ் ஊடக செய்தி கூறுகிறது.
டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட் தலைமை செயல்முறை அதிகாரி பதவி, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இருந்து காலியாக இருந்து வருகிறது. அதன் தலைமைச் செயல் முறை அதிகாரியாக ஈராண்டு கால ஒப்பந்தத்தில் இருந்த ஓகடஸ் ரல்ஃப் மார்ஷல் பதவி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது.
மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான மறைந்த துன் சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரியும் இப்பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
மஇகாவிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத நிலையில் ஜிஎல்சி கம்பெனிகளில் அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் ஓர் முயற்சியாக மைக்கா ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான 61 வயது வேள்பாரியின் பெயரும் டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு பலமாக அடிப்பட்டு வருகிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


