டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்டின் புதிய தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு இதுவரையில் மூவரின் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸ்மான் இஸ்மாயில்,மஇகா உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி , மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் முன்னாள் தலைவர் அல் - இஷால் தி கெச்சிக் ஆகியோர் இப்பதவிக்கான போட்டியில் இருப்பதாக தீ எட்ஜ் ஊடக செய்தி கூறுகிறது.
டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட் தலைமை செயல்முறை அதிகாரி பதவி, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இருந்து காலியாக இருந்து வருகிறது. அதன் தலைமைச் செயல் முறை அதிகாரியாக ஈராண்டு கால ஒப்பந்தத்தில் இருந்த ஓகடஸ் ரல்ஃப் மார்ஷல் பதவி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது.
மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான மறைந்த துன் சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரியும் இப்பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
மஇகாவிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத நிலையில் ஜிஎல்சி கம்பெனிகளில் அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் ஓர் முயற்சியாக மைக்கா ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான 61 வயது வேள்பாரியின் பெயரும் டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு பலமாக அடிப்பட்டு வருகிறது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்


