Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

'கெங் அடிக் லாபு பெசார்' என்றழைக்கப்படும் கொள்ளைக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக, இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் மீது பாட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கானது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதி ரோஸ்லான் ஹமீத் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களிடமிருந்து எந்த வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நூர் ஆல்யா நாதிரா சே ஹசான் வயது 22, நூருல் நடாஷா முகமட் சுக்ரி வயது 23, முகமட் சாமெரின் ஷாரோம் வயது 35, முகமட் ஐசாட் ரோஸ்மட் வயது 28, ஐசல் அபு பக்கர் வயது 23, முகமட் ஜைனி யூசோஃப் வயது 27, முகமட் அசிசி அப்துல் கபார் வயது 22, முகமட் பித்ரி அப்துல் கரீம் வயது 31 ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு, மார்ச் முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை, பட்டர்வொர்த், ஜாலான் கம்போங் காஜா, விஸ்டா பெர்டானாவில் அமைந்துள்ள கெங் அடிக் லாபு பெசார் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

இந்த வழக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் அல்லது சொஸ்மா மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு கீழ் வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

கோலா கிராய் பயிற்சி மருத்துவ மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கோலா கிராய் பயிற்சி மருத்துவ மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது