Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது
தற்போதைய செய்திகள்

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

Share:

கெடா மாநிலம் சுங்கைப்பட்டாணி, தாமான் கெம்பாஸ் குடிருப்புப் பகுதியிலுள்ள வீட்டு ஒன்றின் முன், இன்று அதிகாலை, 30 வயது இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அதே இடத்தில், அவரது சகோதரர், கைகள் துண்டிக்கப்படும் வரையில் தாக்கப்பட்டதாக, கோலாமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 2.00 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பவ நடந்த இடத்தில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹன்யான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 17 முதல் 21 வயது மதிக்கத்தக்க இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் பதின்ம வயது தம்பதியர் என்றும், மற்றொருவர் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் என்றும் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இக்கொலைச் சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 302 மற்றும் பிரிவு 326 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே, கொலைச் செய்யப்பட்ட இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக Sultan Abdul Halim மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலா கிராய் பயிற்சி மருத்துவ மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கோலா கிராய் பயிற்சி மருத்துவ மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது