May 22, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்

Share:

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில், சரியற்ற கூறுகளை முன்வைத்து, பொதுமக்களை தொடர்ந்து குழப்பிவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் செயல்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.

அத்தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களைப் போக்க, அரசாங்கம் அவர்களுக்கு பொருளாதார வகுப்பை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுச்சேவை ஊழியர்களின் ஆற்றலையும் மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

ஆனால், எதிர்க்கட்சியினர் கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில் உண்மையற்ற கதைகளைக் கூறி அம்முயற்சிகளை சிறுமைப்படுத்தி வருகின்றனர்.

ஆகையால், நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் எவ்வாறு நிர்வகித்து வருகின்றது என்பது குறித்து, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், நாட்டின் கருவூல மைய தலைமை செயலாளர் டத்தோ ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டுமென நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் கேலியாக வலியுறுத்தினார்.

Related News