May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

பூச்சோங், மே 06-

பூச்சோங், ஜாலான் பூச்சோங், தாமான் தெனாகா -வில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 29 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் யமாஹா Y15 ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த லான்ஸ் கார்போரல் ரெனால்டி ரப்டி என்கிற அந்த போலீஸ் அதிகாரி, மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுத்திப்படுத்தியதை தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

இச்சம்பவம் குறித்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 - இன் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கு மஷாரிமான் மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News