கனத்த மழையின் காரணமாக பகாங், ரொம்பின், Felda Selancar நில குடியேற்றப்பகுதியில் பிரதான சாலை இடிந்து விழுந்ததில், சாலை துண்டிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. சாலை துண்டிப்பினால் பத்துக்கும் மேற்பட்ட நிலக்குடியேற்றப் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாற்றுப்பாதையிலும் தீவைப் போல் நீர் நாலாபுறமும் சூழ்ந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.








