Jul 27, 2026
Thisaigal NewsYouTube
யானை தாக்கியதில் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுப்பினர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

யானை தாக்கியதில் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுப்பினர் படுங்காயம்

Share:

திரங்கானு, மார்ச் 26.

திரங்கானு, கெமாமான், சென்னேஹ்-விலுள்ள பெல்டா சேருள் வனப்பகுதியில் யானை தாக்கியதால் தூக்கியெறிப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையை சேர்ந்த உறுப்பினர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மாலை 2 மணியளவில், நிகழ்ந்த அச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு முதுகு மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதர 8 உறுப்பினர்களுடன் சேர்ந்து வனவிலங்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காட்டிலிருந்து வெளியேற முற்பட்ட வேளையில், பின்னாளிலிருந்து வந்த யானை அந்த ஆடவரை தும்பிக்கையால் தாக்கியதில், அவர் தூக்கியெறிப்பட்டு கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர், கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 14 பேர் அடங்கிய சென்னேஹ் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த ஆடவரை மீட்டு கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்