Mar 19, 2026
Thisaigal NewsYouTube
யானை தாக்கியதில் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுப்பினர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

யானை தாக்கியதில் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுப்பினர் படுங்காயம்

Share:

திரங்கானு, மார்ச் 26.

திரங்கானு, கெமாமான், சென்னேஹ்-விலுள்ள பெல்டா சேருள் வனப்பகுதியில் யானை தாக்கியதால் தூக்கியெறிப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையை சேர்ந்த உறுப்பினர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மாலை 2 மணியளவில், நிகழ்ந்த அச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு முதுகு மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதர 8 உறுப்பினர்களுடன் சேர்ந்து வனவிலங்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காட்டிலிருந்து வெளியேற முற்பட்ட வேளையில், பின்னாளிலிருந்து வந்த யானை அந்த ஆடவரை தும்பிக்கையால் தாக்கியதில், அவர் தூக்கியெறிப்பட்டு கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர், கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 14 பேர் அடங்கிய சென்னேஹ் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த ஆடவரை மீட்டு கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக கூறப்படுகின்றது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை