இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மாநகரில் பிரதான நில அடையாளத்தை தாங்கிய ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- பகுதியில் Concorde ஹோட்டல் முன்புறம் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் பல கார்கள் சேதமுற்றன.
மரத்தின் கிளைகள் நாலாபுறமும் சிதறி, உயரே பாயும் மோரோனாரயில் வழித்தடத்திலும் சிக்கியதால் மோரோரயில் சேவை பாதிக்கப்பட்டது.
Bukit Nenas- ஸிற்கும் Raja Chulan நிலையத்திற்கும் இடையிலான மோரோன ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையில் எத்தனை கார்கள் சிக்கிக்கொண்டன என்பது உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும் அப்பகுதியில் சாலைபோக்குவரத்து நிலைக்குத்தியுள்ளது.
மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றன.
மரத்தையும், சேதமுற்ற கார்களையும் அகற்றும் பணி முடிவுறும் வரையில்ஜாலான் சுல்தான் இஸ்மாயில் அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








