Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூன்.12-

கோலாலம்பூர் மையப் பகுதியான புடுவில் உள்ள இரவு கேளிக்கை இன்னிசை விடுதிகளில் குடிநுழைவுத் துறையினர் இன்று விடியற்காலை வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பயண ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தொடங்கி, இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இந்த மாபெரும் சோதனை நடவடிக்கையில் கேளிக்கை மையங்களில் இருந்த 310 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 அந்நியர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

பிடிபட்டவர்களில் 185 இந்தோனேசியர்கள் ஆவர். மொத்தம் 106 ஆண்கள், 79 பெண்கள் கைது செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று குடிநுழைவுத்துறை மேலும் கூறியது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை