ஷாஹ் அலாம், ஏப்ரல் 29-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முதியோர் இல்லத்தின் மேலாளரை ஏமாற்றியதாக செலாயாங் முன்னாள் நகராண்மை கழகத்தின் ஊழியர் ஒருவருக்கு இன்று ஷாஹ் அலாம் செஷன் நீதிமன்றத்தில் 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
43 வயது முருகன் முனியாண்டி என்கிற அந்த ஊழியர் நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூத் முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு, அவர் இக்குற்றங்களை ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை வழங்கப்பட்டது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 417 பிரிவின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி சிலாங்கூர், தாமான் செலாயாங் செகார் மற்றும் ஜாலான் ராஜா லாவுட் -டில் உள்ள வங்கியில் அந்நபர் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகிறது.








