Mar 19, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லாரியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லாரியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

கோப்பேங், ஏப்ரல் 05-

பேராக், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 307.5 ஆவது கிலோமீட்டரில் லாரியுடன் டிரெய்லர் மோதியதில் இரண்டு வங்காளதேச பிரஜைகள் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 5.55 மணியளவில் பொருட்களை ஏற்றி சென்ற மூன்று டன் எடையுள்ள லாரி, மாவுகளை கொண்டு சென்ற டிரெய்லருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பேராக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் சபரோட்சி னோர் அஹ்மத் தெரிவித்தார்.

உள்ளூரை சேர்ந்த 36 வயதுடைய லாரி ஓட்டுநருக்கு கை முறிவு ஏற்பட்ட வேளையில் அதில் பயணித்த 26 மற்றும் 29 வயதுடைய அந்நிய பிரஜைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சபரோட்சி னோர் கூறினார்.

இக்கோர விபத்தில் 58 வயதுடைய டிரெய்லர் ஓட்டுநர் பலத்த காயமின்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக அவர் தெளிவுப்படுத்தினார். மேல் நடவடிக்கைகளுக்காக விபத்தில் இறந்தவர்களின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோட்சி னோர் இன்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

Related News