கோலாலம்பூர், ஜூன்.16-
இவ்வாரத்தில் புத்ராஜெயா மற்றம் கோலாலம்பூர் நீதித்துறைக் கட்டடங்களில் நடைபெறும் 9 முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கியப் பிரமுகர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்காரம் தொடர்புடைய வழக்கும் ஒன்றாகும்.
பிரபல உள்ளூர் பாடகர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்காரம் மீதான வழக்கில் அந்தப் பாடகர், நாளை செவ்வாய்க்கிழமை புத்ராஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று 17 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் அந்த பிரபலம், நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








