மற்றவர்களுக்கான BUDI95 பெட்ரோல் வாங்கும் வரம்பு குறைக்கப்பட்டாலும், ஈ-ஹெய்லிங் மற்றும் கிக் பணியாளர்களுக்கான பழைய வரம்பு அப்படியே நீடிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான மாத வரம்பு 200 லிட்டராகக் குறைக்கப்பட்ட நிலையில், முழுநேர ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் விநியோகப் பணியாளர்களுக்கு ஏற்கனவே இருந்த 300 லிட்டர் வரம்பு தொடர்ந்து வழங்கப்படும்.
இவர்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பெட்ரோல் பயன்பாட்டைச் சார்ந்திருப்பதால், அவர்களின் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்ற என்ற மானிய விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்.
பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் கிிக் பணியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகப் பிரதமர் வலியுறுத்தினார்.








