Jul 27, 2026
Thisaigal NewsYouTube
3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக, இனம், சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரங்களை காரணமாக கொள்வதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென Lawyers for Liberty அமைப்பின் இயக்குநர் சயிட் மாலெக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும் சிவில் உரிமைகள் மீறப்படும் போதெல்லாம் அரசாங்கம் 3R விவகாரங்களை காரணமாக கூறுகின்றது. கழக சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வாறு நடந்துக்கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சாடினார்.

3R விவகாரங்களுக்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை களைய, இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிந்தனை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கு, அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் கூறியிருந்தது தொடர்பில், சயிட் மாலெக் அவ்வாறு தெரிவித்தார்
.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்