Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மெய்காவலர் சுயநினைவு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

மெய்காவலர் சுயநினைவு திரும்பினார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் 1-இல் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 38 வயது முஹம்மது நூர் ஹடித் ஜைனி என்கிற மெய்க்காப்பாளர் சுயநினைவுக்கு திரும்பினார்.

சைபர்ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுயநினைவு திரும்பிய நிலையில், அவருக்கு, பொறுத்தப்பட்டிருந்த சுவாச உதவிக் கருவி நேற்று காலையில் அகற்றப்பட்டது.

தற்போது, அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கியிருப்பதாக, அவரது மனைவியான 38 வயது சித்தி நோரைடா ஹாசன் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில், பின்னிரவு மணி 1.30 அளவில் ஆடவர் ஒருவர் அவரது மனைவியை நோக்கி, துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய நூர் ஹடித் காயத்திற்கு இலக்காகியிருந்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் தலைமறைவாகியதை அடுத்து, கைது வேட்டையை தொடங்கிய போலீஸ், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கிளந்தான், கோத்தா பாருவில் அவரை கைது செய்தது.

சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக, 1971ஆம் ஆண்டு சுடும் சட்டம் மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்