May 22, 2026
Thisaigal NewsYouTube
மெய்காவலர் சுயநினைவு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

மெய்காவலர் சுயநினைவு திரும்பினார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் 1-இல் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 38 வயது முஹம்மது நூர் ஹடித் ஜைனி என்கிற மெய்க்காப்பாளர் சுயநினைவுக்கு திரும்பினார்.

சைபர்ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுயநினைவு திரும்பிய நிலையில், அவருக்கு, பொறுத்தப்பட்டிருந்த சுவாச உதவிக் கருவி நேற்று காலையில் அகற்றப்பட்டது.

தற்போது, அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கியிருப்பதாக, அவரது மனைவியான 38 வயது சித்தி நோரைடா ஹாசன் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில், பின்னிரவு மணி 1.30 அளவில் ஆடவர் ஒருவர் அவரது மனைவியை நோக்கி, துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய நூர் ஹடித் காயத்திற்கு இலக்காகியிருந்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் தலைமறைவாகியதை அடுத்து, கைது வேட்டையை தொடங்கிய போலீஸ், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கிளந்தான், கோத்தா பாருவில் அவரை கைது செய்தது.

சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக, 1971ஆம் ஆண்டு சுடும் சட்டம் மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை