Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் தம்பதி மீது மிளகு தெளிப்பான் கொண்டு தாக்குதல் - சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் தம்பதி மீது மிளகு தெளிப்பான் கொண்டு தாக்குதல் - சந்தேக நபர் கைது

Share:

சிரம்பானில் தம்பதியர் மீது மிளகுத் தூள் தெளிப்பானைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இரவு 11.45 மணியளவில், அந்நபர் அவரது வீட்டின் வெளியே கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் யாதிம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 31ஆம் தேதி மாலை 6 மணியளவில், தமது காரில் சென்று கொண்டிருந்த தம்பதிக்கு அருகே வந்த மற்றொரு காரில் இருந்து இறங்கிய அந்நபர் இச்செயலைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.

இந்த தாக்குதலால் உடலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தம்பதியர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபருக்கு, போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஏற்கனவே மூன்று முந்தைய பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு