ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அம்மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து பெற்றவுடன், 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான சிறப்புக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறப்புக் கூட்டத்தில் மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
நேற்று, சௌஜானாவில் அமைந்துள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்தே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது புதிய மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுத்துள்ளது.








