Mar 20, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீனுக்கு கடப்பிதழை திரும்ப ஒப்படைக்க அனுமதி
தற்போதைய செய்திகள்

முகை​தீனுக்கு கடப்பிதழை திரும்ப ஒப்படைக்க அனுமதி

Share:

கோலாலம்பூர், மே 08-

அதிகார துஷ்பிரயோக மற்றும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், ​தற்காலிகமாக தனது அனைத்துலக கடப்பிதழை திரும்ப பெறுவதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, தற்போது ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் தனது குடும்ப உறுப்பினரை சென்று பார்ப்பதற்கு ஏதுவாக தனது கடப்பிதழை ​நீதிமன்றம் தற்காலிகமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகை​தீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ​நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.

முகை​​தீனின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவி​லை.

நாட்டின் எட்டாவது பிரதமராக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் பொறுப்பு வகித்த போது, தனது அந்தஸ்தை பயன்படுத்தி, மூன்று நிறுவனங்களி​டமிருந்து 23 கோடியே 23 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக முகை​தீன் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் அனைத்துலக கடப்பிதழை ​நீதிமன்றம் பிடித்தம் ​செய்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து