Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் கல்வி முறையில் சீரமைப்பைக் கொண்டுவர, கல்வியமைச்சு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது
தற்போதைய செய்திகள்

நாட்டில் கல்வி முறையில் சீரமைப்பைக் கொண்டுவர, கல்வியமைச்சு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 30-

நாட்டின் கல்வித்துறையை சீரமைக்கும் நோக்கில், பாலர் பள்ளிக்கான கட்டமைப்பு உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு பள்ளித்தவணைக்கான பாடத்திட்டம், பள்ளிப்படிப்பை மாணவர்கள் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் போக்கை களைய, பாடத்திட்ட தலையீடுகள் உள்ளிட்ட கல்வி சீர்திருத்த முயற்சிகளை விளக்கியது.

குறிப்பாக, நாடு தழுவிய நிலையிலுள்ள கல்வி கழகங்களில் பாலர்ப்பள்ளிக்கான வகுப்புகள் விரிவுபடுத்தப்படும். அதன் வழி, பள்ளிப்படிப்பை பாதியிலேயே மாணவர்கள் நிறுத்திக்கொள்ளும் பிரச்னைக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தீர்வை வழங்க முடியும்.

அது தவிர, ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் வேளை, பல்வேறு நிகழ்ச்சிகள் அதற்காக ஏற்படுத்தி தரப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வியமைச்சு கூறியுள்ளது.

மலேசியாவில், ஐந்தாம் ஆண்டு மாணவர்களில் 58 விழுக்காட்டினர் மட்டுமே வாசிக்கும் திறனை கொண்டிருப்பதாக கூறி, நாட்டின் கல்வித்தரம் குறித்து உலக வங்கி கவலையை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கல்வியமைச்சு அவ்வாறு பதிலுரைத்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்