Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஆடவரை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 06-

நேற்று முன்தினம் பினாங்கு, ஜார்ஜ்டவுன், டத்துக் கெராமாட்-டில் ஒரு பேரங்காடி முன்புறம் இ- ஹைலிங் வாகன ஓட்டுநரை கண்​மூடித்தனமாக தாக்கி, காயம் விளைவித்த நபர் ஒருவரை போ​லீசார் ​தீவிரமாக தேடிவருகின்றனர்.

காலை 6.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி, தம்மை ஏற்றிச் செல்வதற்கு இ- ஹைலிங் வாகனத்தை அழைத்து இருக்கிறார். அந்த இ- ஹைலிங் வாகன ஓட்டுநரும் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்து, அந்த சந்தேகப் பேர்வழியையும், அவருடன் இருந்த இரண்டு பெண்களையும் வாகனத்தில் ஏற்ற முற்பட்டுள்ளார்.

பேரோடுவா அத்திவா காரின் பின் கதவை திறந்த அந்த ஆடவர், மதுபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது. காருக்கும் ஏறாமல் அந்த சந்தேகப்பேர்வழி, கதவை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்ததைத் தொடர்ந்து அந்த சவாரியை ரத்து செய்யப் போவதாக இ- ஹைலிங் ஓட்டுநர் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சந்தேகப்பேர்வழி, சட்டை கிழியும் அளவிற்கு இ- ஹைலிங் ஓட்டுநரை சரமாரியாக அடித்து காயப்படுத்தியுள்ளார் என்று தீமுற் லாவுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

Related News