Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களை முடக்குவதற்கு பதிலாக தேசப்பற்றை விதையுங்கள்!
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களை முடக்குவதற்கு பதிலாக தேசப்பற்றை விதையுங்கள்!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 03-

நாட்டு மக்களிடையே இனவாத போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், சமூக ஊடக தளத்தில் சிலவற்றை முடக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென குற்றவியல் நிபுணர் ஷாஹுல் ஹமீத் அப்த் ரஹீம் அண்மையில் ஆலோசனை விடுத்திருந்தார்.

அவரது அந்த ஆலோசனை, இனவாத பிரச்னைகளைக் களைவதற்கு ஒருபோதும் உதவாது என தொடர்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கருத்துரைத்துள்ளனர்.

3R எனப்படும் இனம், சமயம், ஆட்சியாளர் ஆகியவற்றை உட்படுத்திய இனவாத விவகாரங்களை, சமூக ஊடகங்கள் அல்லது பொது ஊடகங்கள் வாயிலாக களைய அரசாங்கம் முயற்சிக்க வேண்டுமென மாறா பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் நூற் நிர்வாண்டி மாட் நோர்டின் வலியுறுத்தினார்.

சமூக ஊடக பயனர்களிடையே அரசியலைமைப்பு மற்றும் தேசிய கோட்பாட்டை முன்னிறுத்தி தேசப்பற்றை விதைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நாட்டின் அடையாளத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள வழி செய்வதோடு, சிந்தனையாளர்களுடன் அரசாங்கம் கைக்கோர்க்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் சீர்த்திருத்த அமைப்பான பெர்சேஹ்-வின் நிர்வாக இயக்குநர் ஓய் கோக் ஹின் கூறுகையில், சமூக ஊடகங்களை முடக்குவதால் பேச்சுரிமை பறிக்கப்படுவதோடு, அந்த தளங்களை நம்பியே வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல மலேசியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்