Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மின்னல் தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்

Share:

பகாங், ஏப்ரல் 25-

பகாங், பெல்டா ஜெங்க்கா-வில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்தோனேசிய ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விவசாய தொழிலாளியான 40 வயதுடைய கமாருதின் என்கிற அவ்வாடவர் மழையின் காரணமாக ரம்பாய் மரத்தடியில் காத்திருந்த வேளையில் மின்னல் தாக்கி சுயநினைவற்ற நிலையில் இருந்ததை குறித்து அவரின் நண்பர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாரான், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ஜம்ரி முகமது சாபர் தெரிவித்தார்.

கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவ்வாடவர் மரத்தடியில் இருப்பதை கண்டறிந்ததாக முகமது ஜம்ரி குறிப்பிட்டார்.

மருத்துவ அதிகாரிகள் அவ்வாடவர் உயிரிழந்ததை உறுதி செய்ததை அடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் ஜெங்க்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது ஜம்ரி மேலும் தகவலளித்தார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்