Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

Share:

காராக், மார்ச் 29-

காராக் பெந்தோங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி -யிலிருந்து லென்தாங் -கை நோக்கி செல்லும் 51.4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த வேளையில் 14 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவத்தின் போது பேருந்தில் அதன் ஓட்டுநர் உட்பட 16 பேர் இருந்ததுடன் அதில் 12 உள்நாட்டவர்கள் மற்றும் நால்வர் வெளிநாட்டு பிரஜைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து இன்று காலை 7.53 மணியளவில் தீயணைப்பு மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் விபத்தில் காயமுற்றவர்களை பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்தை தொடர்ந்து கிழக்கை நோக்கிச் செல்லும் இருபாதைகள் இடையிலான நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றன.

சாலை நெரிசலை குறைக்கும் வகையில் கொன்த்ரா பாதைகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை