May 22, 2026
Thisaigal NewsYouTube
இளம் பெண் பாலியல் பலாத்காரம், வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

இளம் பெண் பாலியல் பலாத்காரம், வர்த்தகர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

நேர்முகப் பேட்டிக்கு வந்த இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அப்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்று இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 36 வயது வர்த்தகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலாளியை சந்திப்பதற்கு அழைத்து செல்வதாக பொய்யுரைத்து, 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வர்த்தகர், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உலு லங்காட்டில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ருவேல் எக்ரம் அபு சாரே இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வர்த்தகருடன் சென்ற அந்த இளம் பெண், தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து, அந்த வர்த்தகருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த வர்த்தகர், விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக நஸ்ருவேல் எக்ரம் மேலும் கூறினார்.

Related News

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை