கோலாலம்பூர் - சிரம்பான் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், ஆடம்பர பெராரி (Ferrari) மற்றும் பெரோடுவா அரூஸ் (Perodua Aruz) கார் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நெடுஞ்சாலையின் வலதுபுற ஓரத்தில் கார்களை நிறுத்தி விட்டு, இரு வாகனங்களில் இருந்தும் இறங்கிய நபர்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் இவர்களை விலக்க முயன்ற நிலையில், இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
ஓட்டுநர்களுக்கு இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறியதே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ள போதிலும், மோதலுக்கான துல்லியமான பின்னணி இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் துறை தரப்பில் இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.








