Jun 8, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு எல்ஆர்டி திட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பாடம் என்கிறார் சாவ்!
தற்போதைய செய்திகள்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பாடம் என்கிறார் சாவ்!

Share:

பரந்த ரயில் கட்டமைப்பு மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிடாது என்றும், அதற்கு முறையான திட்டமிடலும் மக்களின் மனமாற்றமும் அவசியம் என்றும் பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.

பினாங்கின் முதல் எல்ஆர்டி திட்டமான 'முத்தியாரா லைன்' குறித்துப் பேசிய அவர், கிள்ளான் பள்ளத்தாக்கில் விரிவான எம்ஆர்டி, எல்ஆர்டி மற்றும் கம்யூட்டர் ரயில் சேவைகள் இருந்தும் போக்குவரத்து நெரிசல் ஒரு தினசரி சவாலாகவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

2031-க்குள் நிறைவடையவுள்ள பினாங்கு எல்ஆர்டி திட்டத்தின் வெற்றி, அதன் கட்டுமான நிறைவை வைத்து அல்லாமல், மக்களின் தினசரி பயன்பாட்டை வைத்தே அளவிடப்படும் என்றும் சாவ் கோன் இயாவ் குறிப்பிட்டார்.

Related News