Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்களில் மாமன்னர் குறித்த அவதூறு - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் மாமன்னர் குறித்த அவதூறு - இருவர் கைது

Share:

மாமன்னரை இழிவு படுத்தும் வகைஅயில் முகநூல், டிக்டோக் ஆகிய வலைத்தளங்களில் கருத்துகளப் பதிவிட்ட இருவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
முஹமாட் ஃபர்ஹான் எனும் முகநூல் கணக்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் 32 வயதுடைய ஆடவரை நேற்று கோம்பாக் வட்டாரத்திலும், அஸ்வானார் 90 எனும் டிக்டோக் கணக்கிற்கு உறிமையாளர் என நம்பப்படும் 33 வயது ஆடவரை இன்று பினாங்கு பாலிக் பூலாவிலும் கைது செய்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோ செரி முஹமாட்ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்கள் அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் பொது மக்கள் பதிவிடக் கூடாது என முஹமாட் ஷுஹைலி அறிவுறுத்தினார்.

Related News