Dec 4, 2025
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரம் அணுக்காக கண்காணிக்கப்படுகிறது துணை ஐஜிபி அயோப் கான் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரம் அணுக்காக கண்காணிக்கப்படுகிறது துணை ஐஜிபி அயோப் கான் கூறுகிறார்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எந்தவொரு தனிநபரும் தொடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சமூக லைத்தளங்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோக் கான் மைடீன் பிச்னை தெரிவித்தார்.

அதேவேளையில் தேர்தல் காலத்தில் மட்டுமின்றி இதர காலகட்டத்திலும் இவ்விவகாரம் தொடர்கிறது என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவக்கையை அரச மலேசிய போலீஸ் படை அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர், பூலாய் மற்றும் சிப்பாங் ஜெராம் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை ஐஜிபி இதனை தெரிவித்தார்.

Related News