Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 20 சமான்கள் வெளியிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 20 சமான்கள் வெளியிடப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 7 -

புக்கிட் அம்பாங் சௌஜானாவில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் மூலம் 20 சமான்கள் வெளியிடப்பட்ட வேளையில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரையில் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவின் மூத்த அதிகாரி உட்பட 14 உறுப்பினர்கள் இச்சோதனையில் ஈடுபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் இஸ்மாயில் கூறினார்.

இதில் ஆறு நபர்களுடனான வாகனங்கள் சோதனை செய்யபட்டதுடன் ஓட்டுநர் உரிமம் இல்லாத, மாற்றியமைக்கப்பட்ட எக்சோஸ், போலியான பதிவு எண் மற்றும் பிற குற்றங்களுக்காக மொத்தம் 20 சமான்கள் வெளியிடப்பட்டதாக மொஹாமாட் அசாம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அம்பாங் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மொஹாமாட் அசாம் தகவல் வெளியிட்டார்.

நோன்பு பெருநாள் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பயனர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது மட்டுமின்றி பிள்ளைகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கண்டிக்குமாறு மொஹமாட் அசாம் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்